மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் மக்கள் பீதி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப் பகுதியினை ஓட்டி அமைந்துள்ள குரும்பனூர், தாசம்பாளையம், வெல்ஸ்புரம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு மலை அடிவார விவசாய நிலத்திற்கு வரும் யானைகள் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதுடன், ஊருக்குள் நுழைந்து சாலைகளிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாசம்பாளையம் பகுதியில் உள்ள முத்து என்பவரது தோட்டத்தினுள் நுழைந்து அங்கு விளைவிக்கப்பட்டிருந்த சோளப் பயிர்களை சேதப்படுத்தியது. 

தொடர்ந்து, தாசம்பாளையம் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சாலையில் நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். 

இருப்பினும் காலை 4 மணி வரை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளையே சுற்றி வந்த யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை உதவியுடன் நெல்லிமலைக்கு விரட்டப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊடுருவல் காரணமாக இரவில் மக்கள் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...