கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப் பகுதியினை ஓட்டி அமைந்துள்ள குரும்பனூர், தாசம்பாளையம், வெல்ஸ்புரம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு மலை அடிவார விவசாய நிலத்திற்கு வரும் யானைகள் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதுடன், ஊருக்குள் நுழைந்து சாலைகளிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாசம்பாளையம் பகுதியில் உள்ள முத்து என்பவரது தோட்டத்தினுள் நுழைந்து அங்கு விளைவிக்கப்பட்டிருந்த சோளப் பயிர்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து, தாசம்பாளையம் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சாலையில் நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.
இருப்பினும் காலை 4 மணி வரை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளையே சுற்றி வந்த யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை உதவியுடன் நெல்லிமலைக்கு விரட்டப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊடுருவல் காரணமாக இரவில் மக்கள் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப் பகுதியினை ஓட்டி அமைந்துள்ள குரும்பனூர், தாசம்பாளையம், வெல்ஸ்புரம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு மலை அடிவார விவசாய நிலத்திற்கு வரும் யானைகள் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதுடன், ஊருக்குள் நுழைந்து சாலைகளிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாசம்பாளையம் பகுதியில் உள்ள முத்து என்பவரது தோட்டத்தினுள் நுழைந்து அங்கு விளைவிக்கப்பட்டிருந்த சோளப் பயிர்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து, தாசம்பாளையம் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சாலையில் நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.
இருப்பினும் காலை 4 மணி வரை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளையே சுற்றி வந்த யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை உதவியுடன் நெல்லிமலைக்கு விரட்டப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊடுருவல் காரணமாக இரவில் மக்கள் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.