கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பணிக்கு செல்லும் முன் இரவு பணியாளர்கள் புரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் புரோட்டா சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நேற்று ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஜீரணம் எளிதில் ஆகாத புரோட்டாவை உண்டதால் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை முதலே பெண் ஊழியர்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து வருகின்றனர்.
இப்படி திடீரென மயக்கமடைந்து வரும் பெண் ஊழியர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் ஆறு பெண் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பணிக்கு செல்லும் முன் இரவு பணியாளர்கள் புரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் புரோட்டா சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நேற்று ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஜீரணம் எளிதில் ஆகாத புரோட்டாவை உண்டதால் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை முதலே பெண் ஊழியர்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து வருகின்றனர்.
இப்படி திடீரென மயக்கமடைந்து வரும் பெண் ஊழியர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் ஆறு பெண் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
