பெண் ஐ.டி ஊழியர்கள் திடீர் மயக்கம் : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பணிக்கு செல்லும் முன் இரவு பணியாளர்கள் புரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் புரோட்டா சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், நேற்று ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஜீரணம் எளிதில் ஆகாத புரோட்டாவை உண்டதால் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை முதலே பெண் ஊழியர்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து வருகின்றனர். 

இப்படி திடீரென மயக்கமடைந்து வரும் பெண் ஊழியர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் ஆறு பெண் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...