கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.
கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கலையரங்கத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமணத்திற்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டங்களை வழங்கினார்.
பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்கள் 1,446 பேருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்த 633 மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 2216 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கமும் என மொத்தம் 13.94 கோடி ரூபாய்க்கான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த 2008-ல் தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது அ.தி.மு.க., அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சூயஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த போடப்பட்டுள்ளது.
தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக அவர்களிடம் கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் முழு கட்டுப்பாடும் உள்ளது. இது ஒரு அருமையான மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். எந்த ஒரு நல்ல திட்டம் வந்தாலும் விமர்சிக்கப்படுகின்றது.
தண்ணீர்
கோவை மக்களுக்கு போதுமான தண்ணீர் நமது மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அதனை வினியோகம் செய்வதில்தான் சிக்கல் இருக்கின்றது. தண்ணீர் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போகின்றோம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கலையரங்கத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமணத்திற்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டங்களை வழங்கினார்.
பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்கள் 1,446 பேருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்த 633 மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 2216 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கமும் என மொத்தம் 13.94 கோடி ரூபாய்க்கான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த 2008-ல் தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது அ.தி.மு.க., அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சூயஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த போடப்பட்டுள்ளது.
தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக அவர்களிடம் கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் முழு கட்டுப்பாடும் உள்ளது. இது ஒரு அருமையான மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். எந்த ஒரு நல்ல திட்டம் வந்தாலும் விமர்சிக்கப்படுகின்றது.
தண்ணீர்
கோவை மக்களுக்கு போதுமான தண்ணீர் நமது மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அதனை வினியோகம் செய்வதில்தான் சிக்கல் இருக்கின்றது. தண்ணீர் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போகின்றோம்.