கோவை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் நேற்று ஆளுநரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக தி.மு.க.,வைச் 192 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்தக் கைது சம்பவத்தைக் செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், சாலையில் அமர்ந்தும் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, வால்பாறையிலும் தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வால்பாறை தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கு மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்டம் உதகை காபிஹவுஸ் சதுக்கப் பகுதியில் தி.மு.க.,வினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
