கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வதந்தி: அமைச்சர் எஸ்.பி., வேலுமணி

கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, ரூ. 3,100 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், குடிநீர் கட்டணம் உயருமா...? பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டு விடுமோ..? என்ற அச்சம் கோவை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசுகையில், "கோவையில் சுமார் ரூ. 3,000 கோடி செலவில் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.  பராமரிப்பு மட்டுமே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...