உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்து : அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி : உதகையில் நிகழ்ந்த கோர விபத்துக்குக் காரணமான பழுதடைந்த பேருந்தை இயக்கக் கூறிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கடந்த 14-ம் தேதி உதகை அருகே மந்தடா எனும் இடத்தில் அரசு பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பத்திற்கு பழுதடைந்த பேருந்தை இயக்கியதுதான் காரணம் எனப் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பேருந்து விபத்தைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் உதகை மத்திய பேருந்து நிலையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் சமிது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விபத்திற்குக் காரணமான பழுதடைந்த அரசு பேருந்தை இயக்கக் கூறிய கிளை மேலாளர், துணை மேலாளர், உதவி செயற் பொறியாளர், பொறியாளர் ஆகிய 4 அதிகாரிகள் மேல் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், இனி இதுபோல, விபத்துக்கள் ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். உதகையில், முதலமைச்சர் அறிவித்தபடி, அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் செய்யது உள்பட ண100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...