தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 நாட்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மாதம் 28-ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கந்தக அமில கசிவுகள் ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தலைமையில் டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் நடைபெற்றன. 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், "கந்தக அமிலத்தை அகற்றும் பணிகளில் 40 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், குறைந்த அளவிலான டேங்கர் லாரிகளே உள்ளதால் இப்பணிகள் இன்னும் 2 தினங்கள் நீடிக்கும்," என்றார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...