தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மாதம் 28-ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கந்தக அமில கசிவுகள் ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தலைமையில் டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் நடைபெற்றன.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், "கந்தக அமிலத்தை அகற்றும் பணிகளில் 40 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், குறைந்த அளவிலான டேங்கர் லாரிகளே உள்ளதால் இப்பணிகள் இன்னும் 2 தினங்கள் நீடிக்கும்," என்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மாதம் 28-ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கந்தக அமில கசிவுகள் ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தலைமையில் டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் நடைபெற்றன.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், "கந்தக அமிலத்தை அகற்றும் பணிகளில் 40 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், குறைந்த அளவிலான டேங்கர் லாரிகளே உள்ளதால் இப்பணிகள் இன்னும் 2 தினங்கள் நீடிக்கும்," என்றார்.