'டிரென்ட்' ஆகும் யோகா: நாம் அதை சரியான முறையில் செய்து வருகிறோமா?

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம்.

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம். 

இந்தியாவில் யோகா-வுக்கு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. நம்நாட்டில் கற்பிக்கப்பட்ட இந்த கலையின் மீது ஈர்ப்பு கொண்ட வெளிநாட்டவர்கள் இதனை பார்த்து, இதன் பயன்களை அறிந்து பரப்புரை செய்த பிறகு தான் நாம் யோகாவின் பலன்களை அறிந்து கொண்டோம். 

இது குறித்து, லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர். சில்பா ஷா கூறுகையில், "இந்த யோகா செய்வதால் ஆன்மிகம், உடல்நலம் போன்றவை அதிகரிக்கும். மேற்கத்திய நாட்டவர் புகழ் பெறச்செய்த நமது யோகாவை தற்போது நாம் கடைப்பிடித்து வருகிறோம். பொதுவாகேவே யோகா மூன்று காரணங்களுக்காக செய்யப்படுகிறது. உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க, உடலில் சிறிய பிரச்சனைகளை சரி செய்ய, ஆன்மீகத்தில் ஆர்வம் பெறுவதற்கு.

இவ்வாறு யோகா கலையை கற்றுக்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் அதற்குரிய பயிற்சியாளர்கள், யோகா மருத்துவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடம் தான் தேவைக்கேற்ப யோகா கற்க வேண்டும்." என்றார். 

தற்போதைய நவீன யுகத்தில் யோகா கற்றுக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.இணையம் மற்றும் புத்தகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறான சூழலில் எதற்கு மற்றவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும். 

இது குறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர்.ஹரிணி கூறுகையில், "என்னிடம் 55 வயதான ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக தானாகேவ யோகா கற்றுவருகிறார். சரியான வழி காட்டுதல் இல்லாத காரணமாக அவரது குடல் சற்று இறங்கியது. இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. 

அவரால் இடதுபுறம் திரும்பி படுக்க முடியாத சூழலும் உருவானது. எனவே, நல்ல பயிற்சியாளர்களிடம் யோகா கற்பதே சிறந்ததாக இருக்கும்." என்றார். 

யோகா என்பது உடல் வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை பெறுவதற்காக மட்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உடல் பலத்தையும் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...