'டிரென்ட்' ஆகும் யோகா: நாம் அதை சரியான முறையில் செய்து வருகிறோமா?

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம்.

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிம்ப்ளிசிட்டி சார்பில் யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்யலாம்? என்பது குறித்து நிபுணர்களிடம் கேட்டறிய புறப்பட்டோம். 

இந்தியாவில் யோகா-வுக்கு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. நம்நாட்டில் கற்பிக்கப்பட்ட இந்த கலையின் மீது ஈர்ப்பு கொண்ட வெளிநாட்டவர்கள் இதனை பார்த்து, இதன் பயன்களை அறிந்து பரப்புரை செய்த பிறகு தான் நாம் யோகாவின் பலன்களை அறிந்து கொண்டோம். 

இது குறித்து, லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர். சில்பா ஷா கூறுகையில், "இந்த யோகா செய்வதால் ஆன்மிகம், உடல்நலம் போன்றவை அதிகரிக்கும். மேற்கத்திய நாட்டவர் புகழ் பெறச்செய்த நமது யோகாவை தற்போது நாம் கடைப்பிடித்து வருகிறோம். பொதுவாகேவே யோகா மூன்று காரணங்களுக்காக செய்யப்படுகிறது. உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க, உடலில் சிறிய பிரச்சனைகளை சரி செய்ய, ஆன்மீகத்தில் ஆர்வம் பெறுவதற்கு.

இவ்வாறு யோகா கலையை கற்றுக்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் அதற்குரிய பயிற்சியாளர்கள், யோகா மருத்துவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளிடம் தான் தேவைக்கேற்ப யோகா கற்க வேண்டும்." என்றார். 

தற்போதைய நவீன யுகத்தில் யோகா கற்றுக்கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.இணையம் மற்றும் புத்தகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறான சூழலில் எதற்கு மற்றவர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும். 

இது குறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் லைப் ஸ்டைல் ஆலோசகர் டாக்டர்.ஹரிணி கூறுகையில், "என்னிடம் 55 வயதான ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த 15 ஆண்டுகளாக தானாகேவ யோகா கற்றுவருகிறார். சரியான வழி காட்டுதல் இல்லாத காரணமாக அவரது குடல் சற்று இறங்கியது. இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. 

அவரால் இடதுபுறம் திரும்பி படுக்க முடியாத சூழலும் உருவானது. எனவே, நல்ல பயிற்சியாளர்களிடம் யோகா கற்பதே சிறந்ததாக இருக்கும்." என்றார். 

யோகா என்பது உடல் வளைந்து கொடுக்கக் கூடிய தன்மை பெறுவதற்காக மட்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உடல் பலத்தையும் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...