போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் 100-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.


Coimbatore: கோவை மாநகர போத்தனூர் காவல் நிலையம் சார்பில் காவல்துறையினரின் உடல்நலம் மற்றும் பார்வைத்திறன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



Aalaya Eye Care மற்றும் Agarwal Eye Hospital இணைந்து நடத்திய இந்த முகாம் லஷ்மி மஹாலில் நடைபெற்றது. முகாமை காவல் ஆய்வாளர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காவல்துறையினரின் உடல்நல பாதுகாப்பு மற்றும் கண் பார்வை பராமரிப்பின் அவசியம் குறித்து பேசினார்.



முகாமில் முழுமையான கண் பரிசோதனை, பார்வைத்திறன் மதிப்பீடு, கண் அழுத்த பரிசோதனை, கண் உலர்வு பரிசோதனை மற்றும் பார்வை குறைபாடுகள் கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.



மேலும் நீண்ட நேர கணினி பயன்பாடு மற்றும் இரவு ரோந்து பணிகளின்போது கண்களை பாதுகாப்பது தொடர்பாக மருத்துவர்கள் விழிப்புணர்வு ஆலோசனைகளையும் வழங்கினர். தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை மற்றும் கண்ணாடி பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...