திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள வாவிபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே காவலர் முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி கேட்பாரன்று கிடந்தது.

காவலர்களை பொதுமக்கள் பெருமதிப்புடன் மதிக்கக்கூடிய நிலையில், அவர்களிடம் மரியாதை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியப் பொருளான முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி காவலர்களின் கவனக்குறைவால் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சாலையில் கேட்பாரன்று கிடந்தது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு தகவலறிந்த காவலர்கள் இருவர் அந்த பகுதிக்கு சென்று தொப்பியை எடுத்துச் சென்றனர்.