திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்து இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழாவில் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம்.
மேலும், ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கூட நாட்டப்படாமல் இருக்கும் நிலையில், சேலம் – சென்னை இடையே புதிய சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
புதிய சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குறைகளை கலைய வேண்டும். காவிரி விவகாரத்தில் போராடியவர்கள், தற்போது காவிரி நீரை கடலில் கலக்காமல் சேகரிப்பதற்கு தேவையான திட்டங்கள் கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதனை உணர்ந்து புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்து இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழாவில் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம்.
மேலும், ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கூட நாட்டப்படாமல் இருக்கும் நிலையில், சேலம் – சென்னை இடையே புதிய சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
புதிய சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குறைகளை கலைய வேண்டும். காவிரி விவகாரத்தில் போராடியவர்கள், தற்போது காவிரி நீரை கடலில் கலக்காமல் சேகரிப்பதற்கு தேவையான திட்டங்கள் கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதனை உணர்ந்து புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.