"கிடப்பில் கிடக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் : துரிதகதியில் சேலம் - சென்னை புதிய சாலை அமைக்கும் திட்டம்"

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்து இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழாவில் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம். 

மேலும், ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கூட நாட்டப்படாமல் இருக்கும் நிலையில், சேலம் – சென்னை இடையே புதிய சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். 

புதிய சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குறைகளை கலைய வேண்டும். காவிரி விவகாரத்தில் போராடியவர்கள், தற்போது காவிரி நீரை கடலில் கலக்காமல் சேகரிப்பதற்கு தேவையான திட்டங்கள் கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதனை உணர்ந்து புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...