"கிடப்பில் கிடக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் : துரிதகதியில் சேலம் - சென்னை புதிய சாலை அமைக்கும் திட்டம்"

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்து இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழாவில் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம். 

மேலும், ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கூட நாட்டப்படாமல் இருக்கும் நிலையில், சேலம் – சென்னை இடையே புதிய சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். 

புதிய சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குறைகளை கலைய வேண்டும். காவிரி விவகாரத்தில் போராடியவர்கள், தற்போது காவிரி நீரை கடலில் கலக்காமல் சேகரிப்பதற்கு தேவையான திட்டங்கள் கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதனை உணர்ந்து புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....