பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07118) ரயிலின் சேவை அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் வியாழக்கிழமைகளில் இரவு 09.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 10.55 மணியளவில் ஐதராபாத் சென்றடைகிறது. 

ஐதராபாத் - எர்ணாகுளம் ரயில்நிலையம் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07117) ரயிலின் சேவை அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் புதன்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 05.30 மணியளவில் எர்ணாகுளம் சென்றடைகிறது. 

இதேபோல, கொச்சிவெலி - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் கொச்சுவெலியில் இருந்து காலை 07.45 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், மறுநாள் மதியம் 02.00 மணியளவில் ஐதராபாத்தை அடைகிறது. 

ஐதராபாத் - கொச்சிவெலி சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் ஐதரபாத்தில் இருந்து இரவு 09.00 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், திங்கட்கிழமை 03.20 மணியளவில் கொச்சிவெலியை அடைகிறது. 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...