பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07118) ரயிலின் சேவை அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் வியாழக்கிழமைகளில் இரவு 09.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 10.55 மணியளவில் ஐதராபாத் சென்றடைகிறது. 

ஐதராபாத் - எர்ணாகுளம் ரயில்நிலையம் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07117) ரயிலின் சேவை அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் புதன்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 05.30 மணியளவில் எர்ணாகுளம் சென்றடைகிறது. 

இதேபோல, கொச்சிவெலி - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் கொச்சுவெலியில் இருந்து காலை 07.45 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், மறுநாள் மதியம் 02.00 மணியளவில் ஐதராபாத்தை அடைகிறது. 

ஐதராபாத் - கொச்சிவெலி சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் ஐதரபாத்தில் இருந்து இரவு 09.00 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், திங்கட்கிழமை 03.20 மணியளவில் கொச்சிவெலியை அடைகிறது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....