சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் 25-ம் தேதி தொடக்கம்

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, வரும் 25-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில், பிரதமர் முன்னிலையில் காணொளி காட்சி மூலம், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூன்றாம் ஆண்டு விழாவில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சூரிய மின் சக்தி நிலையங்களை தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சூரியமின் சக்தி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறியதாவது, "ஜூன் 25-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஸ்மார்ட் சிட்டி 3-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருக்கிறது. இதில், உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகேயும், கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கு வளாகத்திலும், ரூ.11.55 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இரண்டு சூரிய மின்சக்தி நிலையங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...