கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.
கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, வரும் 25-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில், பிரதமர் முன்னிலையில் காணொளி காட்சி மூலம், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூன்றாம் ஆண்டு விழாவில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சூரிய மின் சக்தி நிலையங்களை தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சூரியமின் சக்தி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறியதாவது, "ஜூன் 25-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஸ்மார்ட் சிட்டி 3-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருக்கிறது. இதில், உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகேயும், கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கு வளாகத்திலும், ரூ.11.55 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இரண்டு சூரிய மின்சக்தி நிலையங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, வரும் 25-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில், பிரதமர் முன்னிலையில் காணொளி காட்சி மூலம், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூன்றாம் ஆண்டு விழாவில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சூரிய மின் சக்தி நிலையங்களை தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சூரியமின் சக்தி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறியதாவது, "ஜூன் 25-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஸ்மார்ட் சிட்டி 3-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருக்கிறது. இதில், உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகேயும், கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கு வளாகத்திலும், ரூ.11.55 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இரண்டு சூரிய மின்சக்தி நிலையங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.