உதகை பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருநாவுக்கரசர்

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஊட்டி பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை. அவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தேசிய சுற்றுலாத் தளமாக உதகை விளங்கி வரும் நிலையில், அங்கு அனைத்து வசதிகளும் கொண்ட மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட வேண்டும். அப்போது, உயிரிழப்புகள் தடுக்கப்படும். ஏனெனில் ஒவ்வொரு விபத்தின் போதும், உயர்சிகிச்சை பெற கோவைக்கு தான் வர வேண்டியதாக உள்ளது. எனவே, உதகையில் மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட வேண்டும். மலைப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாகவும், நல்ல முறையிலும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பதெல்லாம் காலாவதியான பேருந்துகள்தான். எனவே, மலைப்பகுதிக்கு நல்ல தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். என்றார்.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு குறித்து அவர் மேலும் பேசியதாவது :- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல்காந்தி குடும்பத்தினர் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினர். இருப்பினும், தற்போது குடியரசுத் தலைவர் அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளது என்பது அவரின் கருத்து. எனவே, சம்மந்தப்பட்டவர்கள் இனி நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கலாம். மனஅழுத்தம், வருத்தம் காரணமாக பேரறிவாளனைக் கருணை கொலை செய்யுமாறு அற்புதம்மாள் கூறுவது ஏற்புடையது அல்ல.

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் வேறு, வேறு கருத்துகளை கூறியுள்ளனர். இதனை வழங்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. எனவே, மூன்றாவது நீதிபதி விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும். ஏனெனில் இது தனி நபர் பிரச்சனை அல்ல. தொகுதி மக்களின் பிரச்சனை. இது 18 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்த 40 லட்சம் மக்களின் பிரச்சனையாகும். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியில் இருக்கிறோமா..? இல்லையா..? என்பது கூட தெரியாமல் உள்ளனர். இதனால், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, நீதிமன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், என்றார். மேலும், இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...