உதகை பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருநாவுக்கரசர்

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஊட்டி பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை. அவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தேசிய சுற்றுலாத் தளமாக உதகை விளங்கி வரும் நிலையில், அங்கு அனைத்து வசதிகளும் கொண்ட மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட வேண்டும். அப்போது, உயிரிழப்புகள் தடுக்கப்படும். ஏனெனில் ஒவ்வொரு விபத்தின் போதும், உயர்சிகிச்சை பெற கோவைக்கு தான் வர வேண்டியதாக உள்ளது. எனவே, உதகையில் மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட வேண்டும். மலைப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாகவும், நல்ல முறையிலும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பதெல்லாம் காலாவதியான பேருந்துகள்தான். எனவே, மலைப்பகுதிக்கு நல்ல தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். என்றார்.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு குறித்து அவர் மேலும் பேசியதாவது :- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல்காந்தி குடும்பத்தினர் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினர். இருப்பினும், தற்போது குடியரசுத் தலைவர் அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளது என்பது அவரின் கருத்து. எனவே, சம்மந்தப்பட்டவர்கள் இனி நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கலாம். மனஅழுத்தம், வருத்தம் காரணமாக பேரறிவாளனைக் கருணை கொலை செய்யுமாறு அற்புதம்மாள் கூறுவது ஏற்புடையது அல்ல.

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் வேறு, வேறு கருத்துகளை கூறியுள்ளனர். இதனை வழங்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. எனவே, மூன்றாவது நீதிபதி விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும். ஏனெனில் இது தனி நபர் பிரச்சனை அல்ல. தொகுதி மக்களின் பிரச்சனை. இது 18 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்த 40 லட்சம் மக்களின் பிரச்சனையாகும். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியில் இருக்கிறோமா..? இல்லையா..? என்பது கூட தெரியாமல் உள்ளனர். இதனால், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, நீதிமன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், என்றார். மேலும், இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...