குறிச்சி குளத்திற்கு நீர் வருகிறது: வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம்..!

கோவை: குறிச்சி குளத்திற்கு வரும் நீரை புட்டுவிக்கி அணையின் மதகுகள் கொண்டு தடுப்பதாக பரவும் வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


கோவை: குறிச்சி குளத்திற்கு வரும் நீரை புட்டுவிக்கி அணையின் மதகுகள் கொண்டு தடுப்பதாக பரவும் வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. தன்னார்வலர்கள் செய்த தூய்மைப் பணியின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வற்றிக் கிடந்த நொய்யல் அன்னை, மழையின் காரணமாக கரைபுரண்டோடிய காட்சிகள் கோவை மக்களின் உள்ளத்தை குளிர்வித்தது.

இந்த சூழலில், குறிச்சி குளத்திற்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாகவும், அந்த குளத்திற்கு வரும் நீரை சிலர், புட்டுவிக்கி தடுப்பணையில் உள்ள மதகுகளை அடைத்து தடுப்பதாகவும் வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது.



ஆனால், அந்த செய்தி தவறானது என்றும், குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...