கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர். 

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் திறந்து வைத்தார். மேலும், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் பொருத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று முறை சார்ந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ. 17,000 கல்வித் தொகைக்கான காசோலை, கல்வி உபகரணங்கள் மற்றும் ரெடிமேடு ஆடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது பட்டப்படிப்பு முடித்த 15 பேருக்கு 'இளம் சாதனையாளர் விருது" சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கி ஊக்குவித்தார். மேலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களுக்கு போர்டு கார் நிறுவனம் மற்றும் ஹெல்பிங் மைன்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட கணினிகள் மற்றும் உலக உருண்டைஉள்ளிட்டவைகளை சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு அவர் வழங்கினார். 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...