தொடர் மழையினால் கோவையில் அணைகள் நிரம்பியும் குடிநீர் தட்டுப்பாடு : நீர் விநியோக நாட்களை நீட்டிக்கக் கோரிக்கை

கோவை : கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகள் நிரம்பியுள்ள நிலையில், குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கோவை : கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகள் நிரம்பியுள்ள நிலையில், குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 28-ம் தேதி முதல், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மழைப் பொழிவு காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணை 38/50அடியாக உள்ளது. பில்லூர் அணை 97/100 அடியாக உள்ளது. ஆழியார் அணை 60/120 அடியாக உள்ளது.



மழைப்பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டங்கள் உயர்ந்தும், நகரில் 5 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வழங்கப்படுகிறது.

"நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாக்கடையோடு கலந்து வீணாகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நகரில் நல்ல மழைப் பொழிவு இருந்தும், 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. கோடைக் காலத்தை போலவே இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம்," என்று புகாரளிக்கிறார் பீளமேட்டைச் சேர்ந்த லட்சுமன்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சி பகுதிகளில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மழைப் பொழிவு காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. தற்போது வரை குடிநீர் விநியோகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் நாட்களில் அணைகளின் நீர்மட்டத்தைப் பொருத்து குடிநீர் விநியோக நாட்கள் அதிகரிக்கப்படும்," என்றனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...