பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் நான்கு சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்தப் பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பி.என்.ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் வந்தவர், அந்தப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்தப் பள்ளத்தில் கேள்விக்குறி அடையாளத்துடன் கூடிய போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக சரி செய்யப்படுவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...