பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் நான்கு சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்தப் பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பி.என்.ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் வந்தவர், அந்தப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்தப் பள்ளத்தில் கேள்விக்குறி அடையாளத்துடன் கூடிய போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக சரி செய்யப்படுவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....