திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் நான்கு சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்தப் பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பி.என்.ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் வந்தவர், அந்தப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்தப் பள்ளத்தில் கேள்விக்குறி அடையாளத்துடன் கூடிய போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக சரி செய்யப்படுவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் நான்கு சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்தப் பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பி.என்.ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் வந்தவர், அந்தப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்தப் பள்ளத்தில் கேள்விக்குறி அடையாளத்துடன் கூடிய போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக சரி செய்யப்படுவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.