நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்: வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. விவசாயிகள் பயிர் அறுவடைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லதாக இருக்கும்.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடையும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வால்பாறை, சிறுவாணி போன்ற பகுதிகளில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் விவசாய நிலங்களில் வடிகால் அமைப்பது நல்லது. திராட்சை, மஞ்சள் போன்ற விவசாயத்தில் தற்போது பூச்சி தாக்க வாய்ப்புள்ளது தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அரிமானம் ஏற்பட்டு நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...