நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்: வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. விவசாயிகள் பயிர் அறுவடைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லதாக இருக்கும்.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடையும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வால்பாறை, சிறுவாணி போன்ற பகுதிகளில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் விவசாய நிலங்களில் வடிகால் அமைப்பது நல்லது. திராட்சை, மஞ்சள் போன்ற விவசாயத்தில் தற்போது பூச்சி தாக்க வாய்ப்புள்ளது தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அரிமானம் ஏற்பட்டு நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...