வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு www.tnau.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பக் கட்டணத்திற்கான (Rs.1,000/- SC/ST Rs. 500/-) வங்கி தொடர்பான இணைப்பு தரப்பட்டிருக்கும்.

இணையதள மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து அதனுடன், தகவல் குறிப்பேட்டில் (Information Brochure) குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்கள்; இணைத்து முதன்மையர், முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அனுப்ப கடைசி தேதி முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு 11-7-2018 மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பிற்கு 13-7-2018 ஆகும்.

நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை பற்றிய அனைத்து தகவல்களும் மின் அஞ்சல் (e-mail) மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். ஆகவே அனைத்து மாணவர்களும் தங்களது மின் அஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை சரியாக விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தினையும் தினமும் தவறாது பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...