வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு www.tnau.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பக் கட்டணத்திற்கான (Rs.1,000/- SC/ST Rs. 500/-) வங்கி தொடர்பான இணைப்பு தரப்பட்டிருக்கும்.

இணையதள மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து அதனுடன், தகவல் குறிப்பேட்டில் (Information Brochure) குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்கள்; இணைத்து முதன்மையர், முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அனுப்ப கடைசி தேதி முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு 11-7-2018 மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பிற்கு 13-7-2018 ஆகும்.

நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை பற்றிய அனைத்து தகவல்களும் மின் அஞ்சல் (e-mail) மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். ஆகவே அனைத்து மாணவர்களும் தங்களது மின் அஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை சரியாக விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தினையும் தினமும் தவறாது பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....