கோவையில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : கைதானவர்களுக்கு போலீஸ் காவல்

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வாரம் சாய்பாபா காலனியில் போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் ரூ. 2,000 நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில், ரூ. 83 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போலி நோட்டுகள் அச்சடித்த வழக்கில் ஆனந்திற்கு ஒரு நாளும், கிதா் முகமது, சுந்தா் ஆகியோருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி பாண்டி உத்தரவிட்டார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...