கோவையில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : கைதானவர்களுக்கு போலீஸ் காவல்

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வாரம் சாய்பாபா காலனியில் போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் ரூ. 2,000 நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில், ரூ. 83 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போலி நோட்டுகள் அச்சடித்த வழக்கில் ஆனந்திற்கு ஒரு நாளும், கிதா் முகமது, சுந்தா் ஆகியோருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி பாண்டி உத்தரவிட்டார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....