கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் சாய்பாபா காலனியில் போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் ரூ. 2,000 நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில், ரூ. 83 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போலி நோட்டுகள் அச்சடித்த வழக்கில் ஆனந்திற்கு ஒரு நாளும், கிதா் முகமது, சுந்தா் ஆகியோருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி பாண்டி உத்தரவிட்டார்.
கடந்த வாரம் சாய்பாபா காலனியில் போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் ரூ. 2,000 நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில், ரூ. 83 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போலி நோட்டுகள் அச்சடித்த வழக்கில் ஆனந்திற்கு ஒரு நாளும், கிதா் முகமது, சுந்தா் ஆகியோருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி பாண்டி உத்தரவிட்டார்.