கோவை - மஸ்கட் இடையே விமானசேவையை தொடங்குகிறது ஓமன் ஏர்ஸ்?

கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மஸ்கட்டில் இருந்து ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் விமான சேவைகளை அதிகரிக்க ஓமன் ஏர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மஸ்கட்டில் இருந்து கோவைக்கு விமானத்தை இயக்க ஓமன் ஏர்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக ஓமன் ஏர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அளித்த பேட்டியில், "எங்களது நிறுவனம் இந்தியாவிற்கான சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதாவது, இந்தியாவிற்கு 27,000 இருக்கைகளாக இருக்கும் தங்களது சேவையை 60,000 இருக்கைகளாக அதிகரிக்க உள்ளோம். அதன்படி, மஸ்கட்டில் இருந்து மங்களூரூ, கோவை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த சேவையில், ஏ-330எஸ் ரக மற்றும் டிரீம்லைனர்ஸ் போன்ற விமானங்களை இயக்கப்படும்." என்றார். 

கோவைக்கு சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை-மஸ்கட் இடையிலான விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்ட மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...