கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய பருவமழையால், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, ஆறுகள் மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த நிலையில், கேரள மாநில மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் அகலி அருகே உள்ள ஆற்றில் நேற்றிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சுகுணன் மற்றும் வல்சம்மா, செல்வராஜ் மற்றும் செல்லம்மா, பழனியப்பன் மற்றும் ஜானகி ஆகிய 3 தம்பதிகள் சிக்கி கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை, அவர்கள் 6 பேரும் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.