அகலி அருகே வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகள் பத்திரமாக மீட்பு

கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.


கோவை : தமிழக - கேரள எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 தம்பதிகளை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.



கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய பருவமழையால், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, ஆறுகள் மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த நிலையில், கேரள மாநில மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் அகலி அருகே உள்ள ஆற்றில் நேற்றிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சுகுணன் மற்றும் வல்சம்மா, செல்வராஜ் மற்றும் செல்லம்மா, பழனியப்பன் மற்றும் ஜானகி ஆகிய 3 தம்பதிகள் சிக்கி கொண்டனர். 



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை, அவர்கள் 6 பேரும் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...