நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒதுக்குக்காடு ஆடர்பாலி சரக பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு யானை ஒன்று வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக, கொளத்தூரை சேர்ந்த அண்ணாதுரை(41), பவானி தொட்டி கிணறு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37), சங்கர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, மூன்றாண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
ஒதுக்குக்காடு ஆடர்பாலி சரக பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு யானை ஒன்று வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக, கொளத்தூரை சேர்ந்த அண்ணாதுரை(41), பவானி தொட்டி கிணறு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37), சங்கர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, மூன்றாண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.