திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது.
ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் புதிதாக 'ஸ்டீரீட் டாக்' என்ற பெயரில் துணிக் கடையை திறந்துள்ளார். கடையின் திறப்பு விழா சலுகையாக ரூ. 250 மதிப்புள்ள சட்டைகளை ரூ. 50-க்கு விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. இதனைப் பார்த்த அருகிலிருந்த மற்ற கடைக்காரர்கள் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தும், பேனர்களை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடனடியாக அங்கிருந்தவர்களை கலைந்து போக சொல்லியும், கடையை பூட்டுமாறும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடை பூட்டப்பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் புதிதாக 'ஸ்டீரீட் டாக்' என்ற பெயரில் துணிக் கடையை திறந்துள்ளார். கடையின் திறப்பு விழா சலுகையாக ரூ. 250 மதிப்புள்ள சட்டைகளை ரூ. 50-க்கு விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. இதனைப் பார்த்த அருகிலிருந்த மற்ற கடைக்காரர்கள் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தும், பேனர்களை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடனடியாக அங்கிருந்தவர்களை கலைந்து போக சொல்லியும், கடையை பூட்டுமாறும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடை பூட்டப்பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.