குறைந்த விலைக்குத் துணிகளை விற்றதால் ஆத்திரம் : கடையை அடித்து உடைத்த பிற வியாபாரிகள்

திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது. 

ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் புதிதாக 'ஸ்டீரீட் டாக்' என்ற பெயரில் துணிக் கடையை திறந்துள்ளார். கடையின் திறப்பு விழா சலுகையாக ரூ. 250 மதிப்புள்ள சட்டைகளை ரூ. 50-க்கு விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. இதனைப் பார்த்த அருகிலிருந்த மற்ற கடைக்காரர்கள் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தும், பேனர்களை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடனடியாக அங்கிருந்தவர்களை கலைந்து போக சொல்லியும், கடையை பூட்டுமாறும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடை பூட்டப்பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...