கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து காளம்பாளையம், அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் 'வாலிபால் ஃபர் டைகர்ஸ்' என்ற வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை நிதியம் கோவையைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆனைக்கட்டி, புதுக்காடு, ஹலிமோயர், காளம்பாளையம் மற்றும் தெங்குமராடா உள்ளிட்ட பகுதிகளைடச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.

இதில், ஆனைகட்டி அணி முதல்பரிசு மற்றும் ரூ. 5,000 ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது. காளம்பாளையம் 2-வது பரிசை வென்றது.

"மிக முக்கிய வனப்பகுதிகளில் மோயர் பள்ளத்தாக்கும் ஒன்றாகும். புலிகள் பாதுகாப்பிற்கு அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வாலிபால் போட்டியானது, மலைவாழ் மக்களின் மாலைநேர விளையாட்டாகும்," இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து காளம்பாளையம், அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் 'வாலிபால் ஃபர் டைகர்ஸ்' என்ற வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை நிதியம் கோவையைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆனைக்கட்டி, புதுக்காடு, ஹலிமோயர், காளம்பாளையம் மற்றும் தெங்குமராடா உள்ளிட்ட பகுதிகளைடச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.

இதில், ஆனைகட்டி அணி முதல்பரிசு மற்றும் ரூ. 5,000 ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது. காளம்பாளையம் 2-வது பரிசை வென்றது.

"மிக முக்கிய வனப்பகுதிகளில் மோயர் பள்ளத்தாக்கும் ஒன்றாகும். புலிகள் பாதுகாப்பிற்கு அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வாலிபால் போட்டியானது, மலைவாழ் மக்களின் மாலைநேர விளையாட்டாகும்," இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.