கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கவுண்டம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள டிரைவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள துடியலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இத்தனை புகார்கள் கொடுத்தும், தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென, கவுண்டம்பாளையம் - இடையார்பாளையம் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

கவுண்டம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள டிரைவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள துடியலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இத்தனை புகார்கள் கொடுத்தும், தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென, கவுண்டம்பாளையம் - இடையார்பாளையம் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.