கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



கவுண்டம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள டிரைவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள துடியலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இத்தனை புகார்கள் கொடுத்தும், தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென, கவுண்டம்பாளையம் - இடையார்பாளையம் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...