கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



கவுண்டம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள டிரைவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள துடியலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இத்தனை புகார்கள் கொடுத்தும், தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென, கவுண்டம்பாளையம் - இடையார்பாளையம் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....