15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் ரத்தினவேல் பேட்டியின்போது கூறுகையில், "தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 28-ந்தேதி தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு சென்று முற்றுகையிட உள்ளோம்," என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுக்குழு தலைவர்கள் எல்.பி.எப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராக்கிமுத்து, சி.ஐ.டி.யு., மூர்த்தி, டி.டி.பி.டி.எஸ்., ஜீவா மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., டி.டி.பி.டி.எஸ்., தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...