15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் ரத்தினவேல் பேட்டியின்போது கூறுகையில், "தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 28-ந்தேதி தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு சென்று முற்றுகையிட உள்ளோம்," என்றார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுக்குழு தலைவர்கள் எல்.பி.எப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராக்கிமுத்து, சி.ஐ.டி.யு., மூர்த்தி, டி.டி.பி.டி.எஸ்., ஜீவா மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., டி.டி.பி.டி.எஸ்., தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....