கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் ரத்தினவேல் பேட்டியின்போது கூறுகையில், "தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 28-ந்தேதி தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு சென்று முற்றுகையிட உள்ளோம்," என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுக்குழு தலைவர்கள் எல்.பி.எப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராக்கிமுத்து, சி.ஐ.டி.யு., மூர்த்தி, டி.டி.பி.டி.எஸ்., ஜீவா மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., டி.டி.பி.டி.எஸ்., தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தொ.மு.ச., பேரவை துணைத்தலைவர் ரத்தினவேல் பேட்டியின்போது கூறுகையில், "தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 28-ந்தேதி தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு சென்று முற்றுகையிட உள்ளோம்," என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுக்குழு தலைவர்கள் எல்.பி.எப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராக்கிமுத்து, சி.ஐ.டி.யு., மூர்த்தி, டி.டி.பி.டி.எஸ்., ஜீவா மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., டி.டி.பி.டி.எஸ்., தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.