மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறப்பு

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 10,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

இதனால் அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்தும், மின் இயக்கத்திற்காகவும் 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரையையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது. 

எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியில், நீர் இருப்பு 97 அடியாக உள்ளது.

மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இரவில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...