கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 10,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்தும், மின் இயக்கத்திற்காகவும் 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரையையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியில், நீர் இருப்பு 97 அடியாக உள்ளது.
மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இரவில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 10,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்தும், மின் இயக்கத்திற்காகவும் 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரையையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியில், நீர் இருப்பு 97 அடியாக உள்ளது.
மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இரவில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.