மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறப்பு

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 10,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

இதனால் அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்தும், மின் இயக்கத்திற்காகவும் 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரையையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது. 

எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியில், நீர் இருப்பு 97 அடியாக உள்ளது.

மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இரவில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...