நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்வதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த மரங்கள் உள்ள பார்ஸன் நீர்த்தேக்கத்திற்கு வரும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. இதனால், நீரேற்றும் பணியும் தடைபட்டு, உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடந்த மூன்று தினங்களாக தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படகு சவாரி
உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அதிக மழை மற்றும் காற்று வீசும் போது, மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்வதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த மரங்கள் உள்ள பார்ஸன் நீர்த்தேக்கத்திற்கு வரும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. இதனால், நீரேற்றும் பணியும் தடைபட்டு, உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடந்த மூன்று தினங்களாக தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படகு சவாரி
உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அதிக மழை மற்றும் காற்று வீசும் போது, மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
