வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால், தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வரும் நிலையில், வால்பாறையில் பல இடங்களில் சாலைகள் மண் சரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது. மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதேபோல, நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்தன. வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.

இதேபோல, சோலையார் அணைக்கு செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் வால்பாறை - சோலையார் அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சாலையில் கிடக்கும் மண், கற்களை அகற்றினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனிடையே, வால்பாறையில் பலத்த மழை காற்று காரணமாக காமராஜ் நரில் மல்லிகா என்பவரது வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வரும் நிலையில், வால்பாறையில் பல இடங்களில் சாலைகள் மண் சரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது. மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதேபோல, நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்தன. வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.

இதேபோல, சோலையார் அணைக்கு செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் வால்பாறை - சோலையார் அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சாலையில் கிடக்கும் மண், கற்களை அகற்றினர். இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனிடையே, வால்பாறையில் பலத்த மழை காற்று காரணமாக காமராஜ் நரில் மல்லிகா என்பவரது வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.