கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது.
கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது.

கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்தில், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதோர் என 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

"இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், பரஸ்பரம் மத நல்லிணக்கம் மலரவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம், மாற்றுத்திறனாளிகளையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராக உணர வைக்க நடத்தப்படுகிறது. இதனால் இஸ்லாம் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது," இவ்வாறு கூறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.


கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்தில், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதோர் என 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

"இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், பரஸ்பரம் மத நல்லிணக்கம் மலரவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம், மாற்றுத்திறனாளிகளையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராக உணர வைக்க நடத்தப்படுகிறது. இதனால் இஸ்லாம் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது," இவ்வாறு கூறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
