மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி சிறுமிகள் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் சமையல் தொழிலாளி இவரது மனைவி சகுந்தலா இவர்களுக்கு மகாலட்சுமி (12), என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும், வைஷ்ணவி (10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவரும், இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 மணிக்கு பெள்ளாதி குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், அங்கிருந்த 10 அடி ஆழம் உள்ள நீரில் இவரும் மூழ்கினர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் நீருக்கு அடியில் மூழ்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...