கனமழையால் நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை: விடுக்கப்பட்டது வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது.

நேற்றிரவு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஆறாயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு பன்னிரெண்டாயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மொத்தம் 100 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியை கடந்தது. 

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு மதகுகளும் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் வழியாக தற்போது வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அணையின் தற்போதைய நீர்வரத்தான ஒன்பதாயிரம் கன அடி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் முதல் சிறுமுகை வரையிலான ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



பில்லூர் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் இதன் கிளையாறுகளான கல்லாறு, காந்தையாறு போன்ற காட்டாறுகளிலும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...